ஜெயச்சித்ராவுக்கு சிவாஜி விருது
சென்னை:
நடிகை ஜெயச்சித்ராவுக்கு சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி மற்றும் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
இதில் சிவாஜியின் முதல் படமான பராசக்தியை தயாரித்த ஏ.வி.எம். நிறுவனம், நடிகை ஜெயசித்ரா, நாடக நடிகர் கிரேஸி மோகன் உள்ளிட்டோருக்கு செவாலியே சிவாஜி விருதை மத்திய இணையமைச்சர் இளங்கோவன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்,
அரசியலில் நான் இந்த இடத்துக்கு வரக் காரணமாக இருந்தவர் சிவாஜி. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டு வர அவர் அடையாளம் காட்டியவர்களில் நானும் ஒருவன். காமராஜர் ஆட்சி அமையும் வரை நான் ஓயமாட்டேன்.
கடந்த 20 நாட்களாக நாட்டில் நடக்கும் சம்பவங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசாரின் கனவு நிறைவேறி விரைவில் காமராஜர் ஆட்சி அமையும் காலம் வரும்.
கடற்கரை சாலையில் சிவாஜிக்கு சிலை அமைத்து பெருமை சேர்த்த முதல்வர் கருணாநிதி அவருக்கு மணி மண்டபமும் அமைக்க வேண்டும் என்றார்.
இந் நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன் ராம்குமார், ஏவி.எம். சரவணன் ஆகியோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications