வாரணாசி: ரயில் நிலைய நடை பாலம் இடிந்து 15 பயணிகள் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
வாரணாசி:
உ.பி. மாநிலம் வாரணாசி அருகே ரயில் நிலையத்தில், நடை பாலம் இடிந்து விழுந்ததில், 15 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உ.பி. மாநிலம் வாரணாசி அருகே உள்ளது முகல்சராய். இங்குள்ள ரயில் நிலையத்தில் இன்று வழக்கத்திற்கு அதிகமாக கூட்டம் காணப்பட்டது.
அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் இரு மார்க்கங்களில் செல்லும் ரயில்கள் வந்து சேர்ந்தன. இதையடுத்து அந்த இரு ரயில்களிலும் ஏறுவதற்காக பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்த பழைய நடை பாலத்தின் மீது முண்டியடித்தபடி ஏறிச் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக நடைபாலம் இடிந்து விழுந்தது. இதில் 15 பயணிகள் இடிபாடுகள் மற்றும் நெரிசலில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications