மாவட்ட ஆட்சியரை அடித்துக் கொன்ற முன்னாள் எம்.பி. உள்ளிட்ட 3 பேருக்கு தூக்கு
பாட்னா:
பீகார் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியரை அடித்துக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஐக்கிய ஜனதாதள முன்னாள் எம்.பி. ஆனந்த் மோகன் உள்ளிட்ட 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனந்த் மோகனின் மனைவியும், அதே கட்சியின் முன்னாள் எம்.பியுமான லவ்லி ஆனந்த்துக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கிருஷ்ணய்யா. இவர் கடந்த 1994ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அப்போது பீகார் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த (பிறகு ஐக்கிய ஜனதாதளத்தில் இணைந்தார்) ஆனந்த் மோகன், அவரது மனைவி லவ்லி ஆனந்த் ஆகியோர்தான் கும்பலை ஏவி நீதிபதியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் ஆனந்த் மோகன், லவ்லி ஆனந்த் தவிர, முன்னாள் எம்.எல்.ஏ அக்லாக் அகமது, ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் அருண்குமார், தற்போதைய எம்.எல்.ஏ விஜய் குமார் சுக்லா, சசி சேகர், ஹரேந்திர குமார் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் மீதான வழக்கு பாட்னா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் ஆனந்த்மோகன், அக்லாக் அகமது, அருண்குமார் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
லவ்லி ஆனந்த், விஜய் குமார் சுக்லா, சசி சேகர், ஹரேந்திர குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் எம்.பி. ஒருவருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் மோகனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications