For Daily Alerts
Just In
ஊழியருடன் சண்டை - காதைக் 'கடித்த' முதலாளி!
துபாய்:
துபாயில், இந்தியாவைச் சேர்ந்த ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆத்திரமடைந்து ஊழியரின் காதைக் கடித்து ரத்தக் காயத்தை ஏற்படுத்தினார்.
காதைக் கடித்தவர் குவைத் நாட்டைச் சேர்ந்தவர். இவரது நிறுவனத்தில் அந்த பாதிக்கப்பட்ட இந்தியர் வேலை பார்த்து வருகிறார். ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் நிறுவன உரிமையாளர்.
அப்போது ஆத்திரமடைந்து இந்தியரின் காதைக் கடித்து விட்டார். பின்னர் அவரை பர்வானியா என்ற இடத்தில் விட்டு விட்டு போய் விட்டார்.
ரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்துக் கொண்டிருந்த அந்த இந்தியரை, நேஷனல் கார்டு என்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு குவைத் தொழிலாளி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 18:03 [IST]