For Daily Alerts
Just In
துபாய்: திருட்டு வழக்கில் 3 இந்தியர்களுக்கு சிறை
துபாய்:
சக ஊழியரிடம் திருடிய 3 இந்தியத் தொழிலாளர்களுக்கு துபாய் நீதிமன்றம் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
தண்டனை விதிக்கப்பட்ட 3 இந்தியர்களில் இரண்டு பேர் கொத்தனார்களாகவும், ஒருவர் எலக்ட்ரீசியனாகவும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் வேலை பார்த்த நிறுவனத்தில் கிளார்க் ஆக வேலை பார்த்தவரிடம் 52 ஆயிரம் திர்ஹாம் பணம், மொபைல் போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை திருடி விட்டனர்.
இதையடுத்து 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த துபாய் குற்றவியல் நீதிமன்றம், 3 பேருக்கும் சிறைத் தண்டனை விதித்தது.
சிறைத்தண்டனை முடிந்ததும் 3 பேரும் நாடு கடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 18:02 [IST]