'சேது'வை எங்களிடம் கொடுங்கள் - நரேந்திர மோடி
மும்பை:
சேது சமுத்திர திட்ட ஒப்பந்தத்தை எங்களிடம் கொடுத்தால் நாங்கள் ராமர் பாலத்திற்கு எந்தவொரு சேதமும் ஏற்படாமல் சிறப்பாக நிறைவேற்றி தருவோம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த விழா ஒன்றில் அவர் பேசுகையில், சேது சமுத்திர திட்டம், ராமர் - ரோம் மோதலை ஏற்படுத்தி விட்டது.
ராமர் இருந்தாரா என்பதில் சந்தேகத்தை உண்டாக்கி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. மக்கள் எதிர்ப்பால் அதை வாபஸ் பெற்றுக் கொண்டது.
முதலில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துவிட்டு அதை திடீரென்று திரும்ப பெறும் நபர்களை சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும்.
ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இதை உங்களால் செய்ய முடியாது என்றால் அந்த திட்டத்தை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்.
ராமர் பாலத்தை இடிக்காமல் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை குஜராத் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications