பொது மக்களுடன் சாலை மறியல்: அதிமுக எம்எல்ஏ கைது

Subscribe to Oneindia Tamil


விளாத்திகுளம்:

விளாத்திகுளத்தில் பழுதான சாலைகளை சீரமைக்க கோரி பொது மக்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்திய அதிமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 12 கிராம சாலைகள் புதுப்பிக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளன. இது பற்றி தொகுதி எம்.எல்.ஏ சட்டசபையில் பேசியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாநில உள்ளாட்சி துறை, ஊரக வளர்ச்சி இயக்குனரிடம் பலமுறை பொது மக்கள் மனு கொடுத்தும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்தும் சாலைகளை உடனடியாக புதுப்பிக்க கோரியும் இன்று காலை விளாத்திகுளத்தில் அதிமுக எம்.எல்.ஏ சின்னப்பன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் தாசில்தார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். 12 கிராம சாலைகளில் 3 சாலைகள் உடனடியாக புதுப்பித்து தரப்படும் என்று உறுதியளித்தார். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மறியல் போராட்டத்தால் அந்த வழியாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியலில் பங்கேற்பதற்காக விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் கண்டித்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் அதையும் மீறி 25 மாணவர்கள் சாலை மறியலில் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ சின்னப்பன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+