மருத்துவமனையில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்தவர் சிவமுருகன். இவர் கூலிவேலை பார்த்து வருகிறார். இவரது மகள் லதா அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையின் 4வது மாடிக்கு சென்றார். அங்குள்ள சிறுநீரகவியல் சிறப்பு வார்டு பிரிவுக்கு சென்ற லதா, அங்கிருந்து திடீரென்று கீழே குதித்துவிட்டார்.
கீழே விழுந்த லதாவின் கை, கால் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே லதா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், லதா விழுந்த இடத்தில் கிடந்த பையில் அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் நன்றாக படிக்க மாட்டேன். எந்த வேலையையும் உருப்படியாக செய்ய மாட்டேன். நான் இறந்தவுடன் எனது உடலை என்னுடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
இருப்பினும் போலீசார் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்று விசாரணை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications