சென்னை கோர்ட்டில் போலீஸ் கொடும்பாவி எரிப்பு
சென்னை:
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை அதிகாரியின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், சிகிச்சைக்காக சென்ற இரு வக்கீல்களை அங்கிருந்த ஏட்டு நடேசன் என்பவரும், மருத்துவமனை ஊழியர்களும் தாக்கியதாக கடந்த சில நாட்களாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அப்ேபாது காவல்துறை அதிகாரி என்று பெயரிடப்பட்ட ஒரு கொடும்பாவியை வக்கீல்கள் கொண்டு வந்தனர். காவல்துறையினரின் சீருடையில் தொப்பி, பூட்ஸ் அணிய வைக்கப்பட்டிருந்த அந்த கொடும்பாவியை வக்கீல்கள் கொளுத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உடனடியாக தலையிட்டு கொடும்பாவியை மீட்டு தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.












Click it and Unblock the Notifications