ஹோமோ செக்ஸ் விவகாரம்-விசாரணையை விரைவாக்க கைதான ஆசிரியர் கோரிக்கை
புளியங்குடி:
டியூசன் படிக்க வந்த மாணவரை தகாத உறவுக்கு அழைத்து அவர் மறுத்ததால் கொலை செய்ததாக ஆசிரியர் மீது தொடரப்பட்ட வழக்கை டி.எஸ்.பி விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புளியங்குடியை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்த திருமலைசாமியின் மகன் விக்னேஷ்வரன். பிளஸ் டூ படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் என்ற பூபதி. ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்துள்ளார். இவரிடம் விக்னேஷ்வரன் டியூசன் படித்து வந்தார்.
கடந்த ஜீன் மாதம் 5ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ்வரன் இரவில் வீடு திரும்பவில்லை. இந் நிலையில் அங்குள்ள குளம் அருகே விக்னேஷ்வரன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்த விசாரணை நடத்திய போலீசார் சத்தியராஜை தேடி வந்தனர். ஆனால், தலைமறைவான சத்தியராஜ் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணையில், நானும் விக்னேஸ்வரனும் செக்ஸ் கதைகள் பேசி கொள்வோம். இதை தொடர்ந்து நாங்கள் இருவரும் ஒரினச் சேர்க்கையில் ஈடுபடுவோம். சம்பவதன்று ஒரினச் சேர்க்கைக்கு ஈடுபட முயன்றபோது அவன் மறுத்ததால் அவனை கொன்றேன் என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.
இந் நிலையில் இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சத்தியராஜ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
நான் விக்னேஷ்வரனுடன் ஒரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், சம்பவதன்று மறுத்ததால் அவரை கொலை செய்ததாகவும் போலீசார் என்னை துன்புறுத்தி வாக்குமூலம் பெற்றனர். இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த வழக்கை வேறு காவல் நிலைய போலீஸார் விசாரிக்க உத்தவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, வழக்குப் பதிவு செய்து நீண்ட காலமாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். சத்தியராஜ் அப்பகுதி டி.எஸ்.பியிடம் மனு அளிக்க வேண்டும். அவர் அதை பரீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications