ஆள் குறைப்பில் பிபிசி-2,800 வேலைகள் குறைப்பு!
லண்டன்:
பிபிசி நிறுவனம் ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக 2800 பேருக்கு வேலை போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உலகின் முன்னணி செய்தி நிறுவனமான பிபிசி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து நிறுவனத்தை காப்பாற்றும் பொருட்டு ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதன் காரணமாக 2800 பேருக்கு வேலை போகப் போகிறது. பிபிசி நிறுவனத்தின் பட்ஜெட்டில் 2 பில்லியன் பவுண்டு அளவுக்கு நஷ்டம் உருவாகியுள்ளது. இதை சரிக்கட்டவே இந்த ஆள் குறைப்பு நடவடிக்கையில் பிபிசி இறங்கியுள்ளது.
ஆள் குறைப்பு நடவடிக்கையால் 3000 பேருக்கும் மேல் வேலை போகும் வாய்ப்பு இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
பிபிசி நிறுவனத்தின் நிதிக் கட்டமைப்பை சீரமைக்கும் நடவடிக்கை குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் தாம்ப்சன் அக்டோபர் 17ம் தேதி விரிவாக அறிவிக்கவுள்ளார்.
நிதி நெருக்கடியை சமாளிக்க ஆள் குறைப்புக்குப் பதில் பிபிசி நிறுவனத்தின் சில சேவைகளை அதாவது பிபிசி3, பிபிசி4 உள்ளிட்ட சேனல்களை மூடி விடலாம் என்று தெரிவிக்கப்பட்ட யோசனையை தாம்ப்சன் நிராகரித்து விடடார்.












Click it and Unblock the Notifications