படிக்க விருப்பமில்லை-கல்லூரி மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
படிக்க விருப்பம் இல்லாததால் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி தபால் தந்தி காலனி 4வது தெருவைச் சேர்ந்தவர் பாக்கியநாதன். கார் டிரைவர். இவரது மகள் வாசுகி. தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
வாசுகிக்கு ஆங்கில பாடம் சரியாக படிக்க வரவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வாசுகி தன்னுடைய பாட நோட்டில் தனக்கு ஆங்கிலம் சரியாக வராததால் படிக்க விருப்பம் இல்லை எனவும், இதனாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதி வைத்துள்ளார்.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications