ஆசிரியையிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் !
புதுக்கோட்டை:
விராலிமலையில் ஆசிரியையிடம் தலைமை ஆசிரியர் சில்மிஷம் செய்ததால் பள்ளிக்கு பொது மக்கள் பூட்டு போட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள சரளப்பட்டியில் உள்ளது ஊராட்சி துவக்கப் பள்ளி. இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன்.
இவர் பள்ளிக்கு தினமும் விராலிமலையிலிருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்து செல்கிறார். இதே பள்ளியில் ஆசிரியையாக புதிதாக வந்து சேர்ந்தார் மல்லிகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).
இவர் தனது ஊரிலிருந்து பள்ளிக்கு பஸ்ஸில் வந்து செல்கிறார். விராலிமலையிருந்து தான் வரும் போது உங்களையும் அழைத்து வந்து விடுகிறேன் என புதிய ஆசிரியையிடம் கூறியுள்ளார் தலைமை ஆசிரியர் முருகன்.
இதை நம்பிய மல்லிகா டீச்சரும் அவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். வழியில் தனது சில்மிஷ விளையாட்டை ஆசிரியை மல்லிகாவிடம் காட்டியுள்ளார் முருகன். இதையடுத்து அவருடன் பைக்கில் செல்வதை தவிர்த்துவிட்டார்.
இதையடுத்து பள்ளியிலேயே ஆசிரியையிடம் தவறாக நடக்க முயற்சி மேற்கொண்டாராம்ல முருகன். இதைத் தொடர்ந்து இவ் விஷயத்தை ஊர் மக்களிடம் சொல்லிய ஆசிரியை தனக்கு நியாயம் கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டதோடு தலைமை ஆசிரியர் முருகனை வேறு ஊருக்கு மாற்ற வேண்டி போராட்டத்தில் குதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களை சமாதானம் செய்தனர். பள்ளிக்கு மக்கள் போட்ட பூட்டை அகற்றினர். சில்மிஷ ஆசிரியர் முருகனை வேறு ஊருக்கு மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications