சுஷில்ஹரி பள்ளியில் மனித கொலு
சென்னை:
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியில், அக்டோபர் 11ம் தேதி முதல் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு மனித கொலு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர்களும், சம்ரட்சனா அமைப்பும் இணைந்து இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. கேளம்பாக்கத்தில் உள்ள ராமராஜ்யா வளாகத்தில் இது நடந்து வருகிறது.
சிவசங்கர் பாபா அவர்களின் யோசனையின்படி மனித கொலு இங்கு வைக்கப்பட்டிருப்பது விசேஷமானதாகும். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த மனித கொலு இங்கு நடந்து வருகிறது.
வயது வித்தியாசமில்லாமல் பல்வேறு தரப்பினரும் இந்த மனித கொலுவில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
வழக்கமாக கொலுக்களில் பொம்மைகள்தான் இடம் பெறும். ஆனால் இங்கு நடைபெறும் கொலுவில் பொம்மைகளுக்குப் பதில் மனிதர்களே இடம் பெற்றுள்ளனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது.
இந்த ஆண்டு வாழ்க்கைக் கொண்டாட்டம், குற்றால குறவஞ்சி, கிஷ்கிந்தா காண்டம், அபங், திருமங்கை ஆழ்வார், பகத் பாம் பாம் போலே சிவா ஆகிய தலைப்புகளில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
மனித கொலுவை சிறப்பாக வடிவமைப்பதற்காக சுஷில் ஹரி பள்ளியும், சம்ரட்சனாவும் இணைந்து பல்வேறு தோட்டங்களை உருவாக்கியுள்ளன.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களைக் குறிக்கும் வகையில் இந்த தோட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு கண்ணகி, பாரி, மனு நீதி சோழன் உள்ளிட்ட வரலாற்று நாயகர்களை சித்தரிக்கும் வகையில் வேடமிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இத்தகவலை சுஷில் ஹரி பள்ளி தாளாளர் எஸ். வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications