நீதிபதி சர்க்காரியா மரணம்

Subscribe to Oneindia Tamil


டெல்லி:

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிஷனுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.சர்க்காரியா சண்டிகரில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91.

இந்தியாவில் இதுவரை அமைக்கப்பட்ட கமிஷன்களிலேயே பெரும் பரபரப்பையும், இன்று வரை முக்கியத்துவம் பெற்றதுமான கமிஷன் சர்க்காரியா கமிஷன்.

கடந்த 1983ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்டது இந்த கமிஷன். நீதிபதி சர்க்காரியா தனது பரிந்துரைகளை 1988ம் ஆண்டு சமர்ப்பித்தார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்தும், அதை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அந்த அறிக்கை இந்திரா காந்தியிடம் வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் ஆட்சியை மாநிலங்களில் அமல்படுத்துவது குறித்தும், அதிகாரப் பகிர்வு குறித்தும் பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கியிருந்தார் நீதிபதி சர்க்காரியா.

நீதிபதி சர்க்காரியா நீண்ட காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சண்டிகரில் உள்ள தனது வீட்டில் சர்க்காரியா மரணமடைந்தார்.

சர்க்காரியாவின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+