ரம்ஜான் - உற்சாக கொண்டாட்டம்
டெல்லி:
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். தமிழகத்திலும் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
ஈத் உல் பிதர் என அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று நாட்டின் அனைத்துப் பகுதியிலும் வழக்கமான உற்சாகத்துடனும், இறை அர்ப்பணிப்புடனும் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இன்று காலை சிறப்புத் தொழுகைகளை நடத்தி முஸ்லீம்கள் ரம்ஜானைக் கொண்டாடினர். சென்னை தீவுத் திடலில் பெரும் திரளான முஸ்லீம்கள் கூட தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இதேபோல தமிழகத்தின் இதர பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவையில் மட்டும் நேற்றே ஒரு பிரிவு முஸ்லீம்கள் ரம்ஜானைக் கொண்டாடி விட்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.
தலைவர்கள் வாழ்த்து:
ரம்ஜான் பண்டிகையைக் கொண்டும் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங, முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications