குண்டுவெடிப்பில் 6 பேர் பலி
லூதியானா:
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற தர்ஹாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், பஞ்சாபில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ரம்ஜான் பண்டிகை என்பதாலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குறிப்பாக அதிக அளவில் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் உள்ள சம்ராலா சாலையில் கூட்டம் அதிகம் இருந்தது.
இப்பகுதியில் உள்ள பிரபல திரையரங்க வளாகம் சிருங்கார் காம்ப்ளக்ஸ் ஆகும். இங்கு நேற்று மாலை முதல் காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது இரவு 9 மணியளவில் திடீரென தியேட்டருக்குள் குண்டுவெடித்தது.
இதையடுத்து தியேட்டருக்குள் பெரும் குழப்பம் காணப்பட்டது. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தியேட்டரில் பெரும் பரபரப்பு நிலவியது. இருக்கைகள் சிதறி விட்டன. கண்ணாடி ஜன்னல்களும் உடைந்து விட்டன.
இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடக்கம். படுகாயமடைந்தவர்கள் சிஎம்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து லூதியானா நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நகர எல்லைகள் மூடப்பட்டன. அதேபோல பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் லஷ்கர் இ தொய்பா அல்லது பப்பர் கல்சா ஆகிய அமைப்புகளில் ஒன்றே இதற்குக் காரணமாக இருக்க முடியும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கும் இதில் முக்கியப் பங்கு இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
தேசிய பாதுகாப்புப் படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் டெல்லியிலிருந்து லூதியானா விரைந்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications