2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை
ஹாங்காங்:
ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரு குழந்தைகளை, கை, கால்களைக் கட்டி 24வது மாடியிலிருந்து தூக்கி வீசிக் கொலை செய்தார். பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
சீன எல்லைப் பகுதியில் உள்ள டின் ஷூய் வாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாக் (36). இவருக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் மகளும் உள்ளனர். அங்குள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் 24வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் மாக்.
நேற்று மாக் தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது இரு குழந்தைகளும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கீழே விழுந்து உடல் சிதறி இறந்திருந்தனர்.
முதலில் இதை தற்கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில்தான் முதலில் தனது இரு குழந்தைகளையும் கை, கால்களைக் கட்டி மாடியிலிருந்து தூக்கி வீசி விட்டு பின்னர் மாக் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட மாக் மன நிலை சரியில்லாதவர் என்று விசாரணையில் தெரிய வந்தது. அவரது கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications