நாடு முழுவதும் தியேட்டர்கள்-வர்த்தக வளாகங்களில் தீவிர பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil


டெல்லி:

நாடு முழுவதும் உள்ள திரையரங்கங்கள், வர்த்தக வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் தியேட்டரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்த நடவடிக்கையை மத்திய உள்துறை முடுக்கி விட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தா கூறுகையில், திரையரங்க உரிமையாளர்கள், வணிக வளாக உரிமையாளர்கள் தங்களது வளாகங்களில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்.

தீவிரவாதிகளின் மிரட்டல் இன்னும் நீடிப்பதால் கூடுதல் கண்காணிப்புடன் அவர்கள் செயல்பட வேண்டும்.

காவல்துறை புற பாதுகாப்பைக் கொடுத்தாலும் கூட தியேட்டர் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவற்றின் உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.

இதற்கிடையே, பஞ்சாப், டெல்லி மற்றும் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் அச்சம் நிலவுவதால், அங்கு உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+