இலங்கையில் 12 நாட்களில் 147 புலிகள் பலி!
கொழும்பு:
கடந்த 12 நாட்களில் பல்வேறு இடங்களில் நடந்த சண்டையில் 147 விடுதலைப் புலிகளை கொன்றுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 10 ராணுவத்தினர் மட்டுமே பலியானதாகவும் அது கூறியுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பலர் பலியாகியுள்ளனர்.
ஆனால் இந்த சண்டைகள் குறித்து இலங்கை ராணுவம் கூறுகையில், கடந்த 12 நாட்களில் நடந்த சண்டைகளில் 10 ராணுவத்தினர் மட்டுமே இறந்தனர். ஆனால் புலிகள் தரப்பில் 147 பேர் பலியாகியுள்ளனர்.
அப்பாவிப் பொதுமக்கள் யாரும் இந்த சண்டைகளில் இறக்கவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து புலிகள் தரப்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் புலிகள் - ராணுவ மோதலில் பலியாகியுள்ளனர். 1983ம் ஆண்டு இனப் போர் வெடித்தது முதல் இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications