தூத்துக்குடி-செல்போன்கள் கடைகளில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 2 செல்ேபான் கடைகளில் கொள்ளை நடந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.
பாலவிநாயகர் கோவில் தெருவில் செல்போன்களை மொத்தமாக விநியோகம் செய்யும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் செல்போன்களை மொத்தமாக விற்பனை செய்து வருவதால் ஏராளமான செல்போன்களை இருப்பு வைத்துள்ளனர்.
நேற்று இரவு அதில் இரண்டு நிறுவனங்களின் பூட்டை உடைத்து 200க்கும் மேற்பட்ட செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளை அடிக்கப்பட்ட செல்போன்கள் அனைத்து கேமரா செல்போன்கள் ஆகும். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேலிருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications