திமுக எம்.எல்.ஏ.வுக்கு அடி, உதை
புதுச்சேரி:
புதுச்சேரியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ ராஜாராமனை 2 பேர் சேர்ந்து கடுமையாக அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, ஏம்பலம் தொகுதியிலிருந்து திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜாராமன். இவர் நேற்று தனது தொகுதிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அபிஷேகம்பாக்கம் என்ற இடத்தில் அவரது கார் வந்தபோது 2 பேர் காரை மறித்து நிறுத்தினர். பின்னர் இருவரும் சேர்ந்து எம்.எல்.ஏவை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் ஓடி விட்டனர்.
காயமடைந்த எம்.எல்.ஏ அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புற நோயாளியாக சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.
பின்னர் தவளைக்குப்பம் போலீஸில் ராஜாராமன் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி தாக்குதல் நடத்திய விஜி என்கிற விஜயக்குமார் (22), சிவபாலன் (25) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்கள் எதற்காக எம்.எல்.ஏவைத் தாக்கினர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications