For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு விடுதியில் 26 மாணவிகள் திடீர் மயக்கம்

By Staff
Google Oneindia Tamil News


அம்பாசமுத்திரம்:

அம்பாசமுத்திரம் அருகே அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் திடீரென மயக்கமடைந்தனர்.

கடையம் ஒன்றியம் மாதாபட்டிணத்தில் அரசு பிற்பட்டோர் மாணவியர் தங்கும் விடுதி உள்ளது. இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் சுமார் 80 பேர் தங்கி படித்து வருகின்றனர்.

இரவு வழக்கம்போல் மாணவிகள் விடுதியில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். அப்போது 26 மாணவிகளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. சிலர் வாந்தி எடுத்தபடி மயங்கினர்.

இதையடுத்து விடுதி காப்பாளர் இசக்கி தாய், காவலர் சந்திரா, சமையல் ஆயா விஜி ஆகியோர் மயக்கம் அடைந்த மாணவிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சாக்கடை கழிவு நீரில் வளர்ந்த கீரையை பயன்படுத்தியதே இந்த உடல் நலக் குறைவுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X