பள்ளிக்கூரை இடிந்தது - மாணவர்கள் தப்பினர்
கோவை:
கோவையில் நர்சரிப் பள்ளியின் மேல் கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாரும் அப்போது இல்லாததால், மாணவர்கள் தப்பினர்.
கோவையில் பிரசித்தி பெற்ற வ.உ.சி. மைதானம் அருகே நர்சரிப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் மேல் கூரை சமீப காலமாக மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கூறி கூரையை மாற்ற வலியுறுத்தி வந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அந்தப் பள்ளிக் கூடத்தின் மேல் கூரை சடசடவென சரிந்து விழுந்தது.
நல்ல வேளையாக அப்போது மாணவ, மாணவியர் யாரும் வகுப்புகளில் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்தப் பள்ளிக்கூடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications