தேவர் குருபூஜை-ராமநாதபுரத்தில் அதிரடிப்படை குவிப்பு
ராமநாதபுரம்:
பசும்பொன்னில் நடக்கவிருக்கும் தேவர் குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் பதட்டமான இடங்களில் அதிரடிப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு வருடந்தோறும் தேவர் குருபூஜை நடத்தப்படும்.
இந்த வருடம் தேவரின் 100வது பிறந்த தின விழா மற்றும் 45வது குரு பூஜை விழா இரண்டும் நடக்கவுள்ளது. இதில் 30 வருடங்களுக்கு பின் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
28ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்த குருபூஜை நடக்கும். இதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரும் பங்கேற்கக் கூடும் என்று தெரிகிறது.
முதல்வர் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் வரவிருப்பதால் அங்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் எஸ்பி திருஞானம் கூறுகையில்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதற்றமான இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்படுவார்கள். தேவர் குருபூஜைக்கு வருபவர்கள் வாகனங்களின் மேல் அமர்ந்து வர தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications