காந்தி சிலைக்கு கோட்சே மாலையிடுவதா-வைகோ!
மதுரை:
தா.கிருட்டிணன் அடிக்கல் நாட்டிய சிலைகளை முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பது, காந்தி சிலைக்கு கோட்சே மாலை அணிவிப்பது போல் உள்ளதாக மதிமுக பொதுச் செ
யலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரையில் மதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் நாச்சியப்பன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது,
திமுகவை அண்ணாதுரை போன்ற தலைவர்கள் வழி நடத்தி சென்றார்கள். ஆனால், வரலாற்றை திசை திருப்பும் விதமாக தீங்கு இழைத்தவர்களுக்கே (அழகிரி) இங்கு புகழ் மகுடம் சூட்டியிருக்கிறார்கள். தன்னலம் கருதாமல் திமுகவிற்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் தா.கிருட்டிணன். அந்த தா.கிருட்டிணன் வெட்டி கொலை செய்தனர்.
மதுரை தெப்பக்குளம் அருகே முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் சின்ன மருது, பெரிய மருது சிலையை அடிக்கல் நாட்டியவர் தான் தா.கிருட்டிணன்.
இது எப்படி இருக்கிறது என்றால் காந்தி சிலைக்கு கோட்சே மாலை அணிவிப்பது போன்றுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications