3 அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல்
ஸ்டாக்ஹோம்:
அமெரிக்காவைச் சேர்ந்த 3 பொருளாதார நிபுணர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
நோபல் பரிசுகளை வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றோர் விவரத்தை நேற்று வெளியிட்டது.
இந்த ஆண்டு அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் லியோனாய்டு ஹர்விக்ஸ், எரிக் மாஸ்கின், ரோஜர் மயர்சன் ஆகியோர் இணைந்து நோபல் பரிசைப் பெறுகின்றனர்.
சந்ைதப் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து இவர்கள் வெளியிட்ட பொருளாதாரக் கொள்கைக்காக நோபல் பரிசு கிடைத்துள்ளது.
ஹர்விக்ஸ் ரஷியாவில் பிறந்தவர், தற்போது அமெரிக்க பிரஜையாக உள்ளார். இவரது வயது 90. நோபல் பரிசைப் பெறும் அதிக வயதானவர் என்ற பெருமையும் ஹர்விக்ஸுக்குக் கிடைத்துள்ளது.
ரஷ்யப் புரட்சியின்போது மாஸ்கோவில் பிறந்தவர் ஹர்விக்ஸ். தற்போது மின்னசோட்டா பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவராக இருக்கிறார்.
எரிக் மாஸ்கின் நியூயார்க்கில் பிறந்தவர். தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழக சமூக அறிவியல் துறை தலைவராக இருக்கிறார்.
ரோஜர் மயர்சன் பாஸ்டனில் பிறந்தவர். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்.
ஆல்பிரட் நோபல் உருவாக்கிய நோபல் பரிசுக்கான பிரிவில் பொருளாதாரத் துறை இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் 1968ம் ஆண்டுதான் இது உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.