ஒரு மணி நேரம் 'அணையும்' மும்பை!
மும்பை:
உலக வெப்பமயமாதலின் ஆபத்தை உணர்த்தும் விதமாக, மும்பையில் வரும் டிசம்பர் 15ம் தேதி ஒரு மணி நேரம் பல்புகள் உள்பட அனைத்து மின் சாதனங்களையும் இயக்குவதை நிறுத்தி நூதன போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் குளோபல் வார்மிங் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் வெப்பமயமாகி வருவதால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளும், இயற்கைச் சீற்றங்களின் அதிகரிப்பும் ஏற்படக் கூடிய அபாயங்கள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கூட குளோபல் வார்மிங் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அல் கோருக்கும், இந்தியரைத் தலைவராகக் ெகாண்ட அமைப்புக்கும்தான் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒரு அமைப்பு குளோபல் வார்மிங் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்துவதற்காக நூதன கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதம் 15ம் தேதி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை மின்விளக்குகளை அணைத்தும் மின் சாதனங்களை இயக்குவதை நிறுத்தியும் குளோபல் வார்மிங் குறித்த பிரசாரங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அது அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications