லண்டன் விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்
லண்டன்:
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இரு விமானங்கள் ரன் வே அருகே மோதிக் கொண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
டாக்சி வே பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் இலங்கை நாட்டு விமானங்கள் மோதிக் கொண்டன.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 747 விமானம் சிங்கப்பூருக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தது. அதே போல இலங்கையின் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ340 விமானம் கொழும்புக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது.
டேக்-ஆப் செய்வதற்காக விமானங்கள் வரிசையாக ரன்வே நோக்கி சென்று கொண்டிருந்தன. அப்போது இந்த இரு விமானங்களின் இறக்கைகளும் மோதிக் கொண்டன. இலங்கை விமானத்தில் 286 பயணிகள் இருந்தனர். பிரிட்டிஷ் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்று தெரியவில்லை.
டாக்சிவேயில் நடந்த இந்த மோதலையடுத்து இரு விமானங்களும் பயங்கரமாக அதிர்ந்தன. அச்சத்தில் பயணிகள் கூச்சலிட்டனர்.
இச் சம்பவத்தையடுத்து இரு விமானங்களின் பயணிகளும் அவசர அவசரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். இச் சம்பவத்தால் யாரும் காயமடையவில்லை.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் பின் பகுதியும் ஒரு பக்க இறக்கையும் சேதமடைந்துவிட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications