மும்பை பங்குச் சந்தையில் பெரும் சரிவு
மும்பை:
கடந்த சில வாரங்களாக மடமடவென உச்சத்தைத் தொட்டு வந்த இந்திய பங்குச் சந்தையில் இன்று பெரும் சரிவு ஏற்பட்டது.
இன்று காலை முதல் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய சில நேரத்தில் 1,700 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. தேசிய பங்குச் சந்தையில் (Nifty) 500 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் தான் மும்பை பங்குச் சந்தை 19,000 புள்ளிகளைத் தொட்டு மாபெரும் சாதனை படைத்தது. இதனால் பெரும்பாலான பங்குகளின் மதிப்புகள் புதிய உயரத்தைத் தொட்டன. இந் நிலையில் மிக விரைவில் 20,000 புள்ளிகளை இந்தய பங்குச் சந்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் இன்றைய சரிவு பங்குச் சந்தையை புரட்டிப் ேபாட்டது. ஒரே நாளில் மிகப் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டதையடுத்து பங்கு வர்த்தகத்தை மும்பை பங்குச் சந்தை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து நிலைமை சற்று சீரானது. மத்திய அரசு சில உறுதிமொழிகளை அறிவித்ததையடுத்து மும்பை பங்குச் சந்தையில் சுமார் 950 புள்ளிகள் மீண்டன. அதே போல தேசிய பங்குச் சந்தையிலும் இழப்பு பாதியானது.












Click it and Unblock the Notifications