கோவிலில் கோஷ்டி மோதல் 23 பேர் கைது!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே அய்யனார் கோவிலில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, உசிலம்பட்டி அருகே நரியம்பட்டியில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தெருவை மையமாக வைத்து தங்கப்பாண்டி மற்றும் ஜெயபால் ஆகியோர்க்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அய்யனார்குளம் கிராம நிர்வாக அதிகாரி மாணிக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் தங்கப்பாண்டி மற்றும் ஜெயபால் உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை விக்ரமங்கல் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன் கைது செய்தார்.
இரு பிரிவினரிடையே மேலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications