தமிழக நதிகளை இணைப்பது குறித்து முக்கிய ஆலோசனை
மதுரை:
தமிழகத்தில் உள்ள நான்கு முக்கிய நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து தமிழக திட்டக் குழுத் துணைத் தலைவர் நாகநாதனை, தேசிய நீர் வழி மேம்பாட்டுக் கவுன்சிலைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது.
இதுகுறித்து கவுன்சிலின் தலைவர் ஏ.சி.காமராஜ் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய நீர்வழி மேம்பாட்டு கவுன்சிலைச் சேர்ந்த நாங்கள் தமிழக திட்டக் குழுத் துணைத் தலைவர் நாகநாதனை வரும் 18ம் தேதி சந்தித்து பேசவுள்ளோம்.
தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள நதிகளான காவிரி, வைகை, தாமிரபரணி மற்றும் வடக்கில் உள்ள பாலாறு ஆகியவற்றை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்.
நதி நீர் இணைப்பிற்கு ரூ.37,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நதிகளை இணைப்பதன் மூலம் ஒரு நதியில் வீணாகும் நீர் வறட்சியான பகுதியில் உள்ள நதிக்கு செல்லும்.
நதி நீர் இணைப்பினால் நிலத்தடி நீர் அதிகரிப்பதுடன், விவசாயிகளும் அதிக பலன் அடைவார்கள். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு அறவே நீங்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications