விவசாயிகளுக்கு வெளிநாட்டு கருவிகள்-வீரபாண்டி ஆறுமுகம்
சென்னை:
தமிழக விவசாயிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து விவசாயக் கருவிகளை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
சமீபத்தில் நான் தாய்லாந்து, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது அந்த நாடுகளில் கரும்பு மற்றும் நெற்பயிர் ஆகியவற்றை அறுவடை செய்வதற்கும், நாற்று நடுவதற்கும் மிக நவீன கருவிகள் பயன்படுத்தப்படுவதை பார்த்தோம்.
ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்படும் நாற்று நடும் எந்திரங்கள் மிகவும் சிறியளவில் தமிழக விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் இருக்கின்றன.
இதேபோல் நெற்பயிர்களை அறுவடை செய்வதற்கும் சிறியது முதல் பெரிய எந்திரங்கள் வரை வித விதமாக உள்ளன. சீன நாட்டில் கரும்பு அறுவடை செய்ய பயன்படுத்தப்படும் எந்திரங்கள் மிக நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அந்த நாடுகளில் இருந்து குழுவினர் சென்னைக்கு வந்து முதல்வரை சந்திக்கவுள்ளனர். அப்போது எத்தனை கருவிகளை இறக்குமதி செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications