சேது திட்டத்தை நாங்கள் கைவிடவில்லை-கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனது பாதுகாப்பு குறித்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், கோர்ட் உண்மையை விளக்கும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இக் கூட்டத்திற்குப் பின் நிருபர்களை சந்தித்தார் கருணாநிதி.
கேள்வி: சட்டசபைக் கூட்டம் நடக்கும் நிலையில், என்னைக் கொல்ல சதி நடக்கிறது. இதில் கருணாநிதி, ஸ்டாலினுக்கு தொடர்புள்ளது, எனது பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று கூறியுள்ளாரே?
கருணாநிதி: அவர் கோர்ட்டிற்கு செல்லட்டும், கோர்ட் உண்மையை விளக்கும்.
கேள்வி: சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டதாக ஜெயலலிதா கூறுகிறாரே?
பதில்: சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் கைவிட்டு விடவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications