'திருமறையும் நபிவழியும்' நூல் வெளியீடு
துபாய் சங்கமம் தொலைக்காட்சியின் சார்பில் இலங்கையைச் சேர்ந்த பன்னூலாசிரியர் டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள 'திருமறையும் நபிவழியும்' நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் துபாய் நாசர் சதுக்கம் அருகாமையில் உள்ள லேண்ட் மார்க் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
'திருமறையும் நபிவழியும்' எனும் நூலை ஸ்கை எக்ஸ்பிரஸ் குழுமத்தின் இயக்குநர் எம்.செய்யது அப்துல் காதர் (சினா தானா) வெளியிடவுள்ளார்.
டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியால் எழுதப்பட்ட 'பண்டார வன்னியன்' நூலை காவியமாக வடித்துள்ளார். இலங்கை அரசின் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சி குறித்த மேலும் விவரங்களுக்கு இதன் ஒருங்கிணைப்பாளரும், சங்கமம் தொலைக்காட்சியின் இயக்குருமான கலையன்பனை (050 6507604) தொடர்பு கொள்ளலாம்