சேது திட்ட ஆய்வுக் குழுவில் இந்து பிரதிநிதிகளை சேர்க்க வி.எச்.பி. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்:
சேது சமுத்திரத் திட்டம் குறித்த ஆய்வுக் குழுவில் இந்து சமூகப் பிரதிநிதிகளை மத்திய அரசு சேர்க்காவிட்டால் நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வி.எச்.பி. தலைவர் பிரவீண் தொகாடியா அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்து பாரம்பரியத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதிகள் செயல்படுகின்றனர்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான ஆய்வுக் குழுவில் உண்மையான இந்து சமூக பிரதிநிதிகளை மத்திய அரசு சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.
எந்தத் திட்டத்தின் பெயராலும் ராமர் பாலம் இடிக்கப்படாது என மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்.
நவம்பர் முதல் வாரத்தில் அயோத்தியில் சாதுக்கள், மதத் தலைவர்கள் மாநாட்டை நடத்தவுள்ளோம் என்றார் தொகாடியா.












Click it and Unblock the Notifications