தீவிர அரசியலுக்கு விரைவில் வருவேன் - முத்துலட்சுமி

Subscribe to Oneindia Tamil


கடலூர்:

மலைவாழ் மக்கள் இயக்கம் மூலமாக மலை வாழ் மக்களின் நலனுக்காக தீவிரமாக பாடுபடுவேன். படிப்படியாக தீவிர அரசியலில் நுழைவேன் என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.

Muthulakshmiகடலூர் மாட்டம் வடலூரில் நடந்த கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்துலட்சுமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழங்குடியினர் நலனுக்காக நான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். சத்யமங்கலம் வனப் பகுதியில் உள்ள பழங்குடியினர் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன். இதற்காகத்தான் மலைவாழ் மக்கள் இயக்கத்தை தொடங்கினேன்.

எனது கணவரைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடிப்படையினரால் இந்த மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள். இன்னும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

3 ஆண்டுகள் நான் எனது கணவருடன் காட்டில் வாசம் புரிந்தேன். அப்போதுதான் பழங்குடியினரின் துயர நிலை எனக்குத் தெரிய வந்தது. மேலும், நான் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது.

தற்போது பழங்குடியினர் நலனுக்காக ஜனநாயக ரீதியில் பாடுபட்டு வருகிறேன். படிப்படியாக நான் தீவிர அரசியலுக்கு வருவேன். அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிப்பேன் என்றார் முத்துலட்சுமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+