சிரஞ்சீவி மகள் டெல்லி கோர்ட்டில் மனு
டெல்லி: குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு காதலரை மணமுடித்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனக்கும் கணவருக்கும் பாதுகாப்பு கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
19 வயதான ஸ்ரீஜா நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த பரத்வாஜ் என்ற வாலிபரை வீட்டு விட்டு ஓடிப் போய் திருமணம் செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது சிரஞ்சீவியின் குடும்பம்.
சிரஞ்சீவின் ஆதரவாளர்களால் தனக்கும் கணவருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால் தலைமறைவாக இருந்து வருகிறார் ஸ்ரீஜா.
இந் நிலையில் ஸ்ரீஜா-பரத்வாஜ் ஜோடி டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பி காதல் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எங்களது ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போலீஸார் மூலம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications