சஞ்சய் தத் மீண்டும் சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

Sanjay Duttமும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று, இடைக்கால ஜாமீனில் வெளிவந்த இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு இன்று தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 வருடங்கள் கடுங்காவல் தண்டனையை மும்பை தடா நீதிமன்றம் விதித்தது. இதனையடுத்து இவர் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் தனக்கு தண்டனை குறித்த தீர்ப்பின் நகல் கிடைக்கும் வரை தன்னை ஜாமீனில் விடக்கோரி உச்சநீதிமன்றத்தை சஞ்சய் தத் அணுகினார். இதனையடுத்து உச்சநீதிமன்றம் சஞ்சய் தத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் சஞ்சய் தத் உள்ளிட்டோருக்கான தீர்ப்பின் நகல் தயாராகி விட்டது. சனிக்கிழமை சஞ்சய் தத் தவிர 13 குற்றவாளிகளுக்கு தீர்ப்பின் நகல் கொடுக்கப்பட்டது. இன்று காலை சஞ்சய் தத் மும்பை தடா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு 4,340 பக்க தீர்ப்பின் நகல் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சஞ்சய் தத் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மும்பை, ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+