மர்ம மனிதன்: சசிகலா, இளவரசியிடம் போலீசார் விசாரணை

Subscribe to Oneindia Tamil

Sasikala and Ilavarasiசென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் மர்ம மனிதன் நுழைந்தது குறித்து ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா, அவரது அக்காள் மகள் இளவரசி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த வாரம் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தண்டபாணி என்பவர் நுழைந்தார். அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா வீட்டு முதல் மாடி வரை சென்று இளவரசியின் அறையைத் திறக்க முயன்றபோது பிடிபட்டார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வரான தனக்கு தமிழக அரசு சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றும், தன்னை கொல்ல சதி நடக்கிறது என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

சட்டமன்றத்தில் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந் நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த ஜெயலலிதாவின் இல்லத்திற்கு தேனாம்பேட்டை உதவி கமிஷ்னர் கண்ணபிரான் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் சென்றனர்.

வீட்டிற்கு வெளியே நின்ற காவலர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்ட அவர்கள் சசிகலா, இளவரசி, அவர்களின் உதவியாளர் கலி.பூங்குன்றன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

மேலும் வீட்டிற்குள் நுழைந்த தண்டபாணியின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், தாராபுரத்திலும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+