முடிந்தால் என் மீது தீ வையுங்கள்: மோடி ஆவேசம்
அகமதாபாத்: ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் மீது கோபத்தை காட்டாமல், தங்கள் கோபத்தை முடிந்தால் என் மீது காட்டுங்கள் என்று எதிர்க்கட்சியினரை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆவேசமாகக் கூறினார்.
குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சூரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அப்போது அவருடைய மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி,
நான் பேசவிருக்கும் மேடைக்கு அருகில் தீ வைத்த இந்த சம்பவம் எதிர்க்கட்சியினர் அல்லது எனது எதிர்ப்பாளர்களின் சதிச் செயலாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் எனக்கு நெருப்பு வைக்கட்டும்.
அப்பாவி மக்கள் மீது கோபத்தை காட்ட வேண்டாம். மேடைக்கு வந்து மேடையில் இருப்பவர்களை கொல்ல வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம் என்றார்.
குஜராத் பாஜகவில் பெரும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மோடிக்கு எதிரானவர்கள் அவரை காலை வாரி விடும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications