ஜெ-வைகோ-சு.சுவாமி திடீர் சந்திப்பு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர்ர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் போயஸ் தோட்டத்தில் சந்தித்து பேசினர்.
இச் சந்திப்பின்போது ராமர் பாலம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடந்ததாகக் கூறப்படுகிறது. சேது திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் சுப்பிரமணியம் சுவாமி, தேர்தல் அறிக்கையில் இந்த திட்டத்தை ஆதரித்துவிட்டு இப்போது திடீரென திட்டத்தை எதிர்த்து வரும் ஜெயலலிதா ஆகியோரை சேது திட்டத்துக்காக குரல் கொடுத்த வைகோ சந்தித்து அது குறித்து விவாதம நடத்தியது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தச் சந்திப்பின்போது ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோரி முக்கிய நகரங்களில் பொதுக் கூட்டம் நடத்துவது என்றும் அதில் பாஜக, விஎச்பி, இந்து முன்னணி மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினரையும் பங்கேற்றச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக-மதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுக்க சுவாமி தீவிரமாக முயன்று வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications