தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை-ஜமாத் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil


தூத்துக்குடி: நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த மாவட்ட முஸ்லிம் கல்வி ஆர்வலர்கள், ஜமாத் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு புதுத் தெரு சமுதாய நலக் கூடத்தில் தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் கல்வி ஆர்வலர்கள் மற்றும் ஜமாத் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. கிரசண்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் மீரான் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமாக இருக்கும் பயங்கரவாதிகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்களின் புனித தலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

முஸ்லிம்களின் சரியான ஜனத்தொகையை அரசிற்கு தெரிவித்திடும் முயற்சியாக அனைத்து ஜமாத் ஓத்துழைப்போடும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சேது கால்வாய் விவகாரத்தில் மதவாத சக்திகளுக்கு இடம் தராமல் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+