பாமகவுடன் இணையும் பாட்டாளி தமிழர் முன்னணி!
திருநெல்வேலி: பாட்டாளி தமிழர் முன்னணி பாமகவுடன் இணையவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் வினயரசு கூறியுள்ளார்.
பாட்டாளி தமிழர் முன்னணியின் தலைமை செயற்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. தலைவர் அ.வினயரசு தலைமை தாங்கினார். பொது செயலாளர் தங்கராசு, நெல்லை க. அருள், மாவட்ட தலைவர் இசக்கி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து தலைவர் வினயரசு நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள சட்டம், பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும்.
இங்குள்ள சாதி, மத மோதல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். சில்லரை வணிபத்தில் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற பன்னாட்டு கம்பெனிகள் நுழைவதை தடை செய்ய வேண்டும்.
சேதுசமுத்திர திட்டத்தை விரைந்து முடித்து தமிழர் கால்வாய் திட்டம் என்று பெயர் வைக்க வேண்டும்.
தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பா.ம.க நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பாடுபட்டு வருவதால் எங்கள் பாட்டாளி தமிழர் முன்னணி இயக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்து டாக்டர் ராமதாஸ் கையை வலுப்படுத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications