நன்னன், பொன்னம்பல அடிகளார் தலைமையில் சமூக சீர்திருத்தக் குழு
சென்னை: மா.நன்னன் தலைமையில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுப. வீரப்பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய சமூக சீர்திருத்தக் குழுவை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
2006-2007ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சமூக சீர்திருத்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க, சமூகவியல் ஆர்வலர்களைக் கொண்ட நிரந்தரக் குழு ஒன்று உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு சமூகச் சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் இக்குழுவின் தலைவராக இருப்பார்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை, வண்ணை தேவகி, திருப்பூர் அல்தாப், திருவாரூர் திருவிடம், பேராசிரியர் சுப. வீரப்பாண்டியன், எஸ்.வெங்கடேசன், பாசறை செல்வராஜ், ஜி.ராமகிருஷ்ணன், பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், கலி.பூங்குன்றன், எம்எல்ஏ ரவிக்குமார், புதுக்கோட்டை விஜயா ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications