ஈராக்கில் போர்- தயாராக தீவிரவாதிகளுக்கு பின்லேடன் அழைப்பு
பாக்தாத்: ஈராக்கில் பெரிய அளவில் புனிதப் போர் தொடுக்க பிரிந்து கிடக்கும் தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைந்து தாக்குதலுக்குத் தயாராக வேண்டும் என்று அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா நீண்ட காலமாக தேடி வரும் பின் லேடன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை இன்னும் முடிந்த பாடில்லை. ஆனால் லேடனின் பேச்சுக்கள் அடங்கிய ஆடியோவும், வீடியோவும் அவ்வப்போது வெளியாகி வந்தன.
ஆனால் கடந்த சில வருடங்களாக லேடனின் வீடியோ எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் லேடனின் புதிய வீடியோ வெளியானது. இது உண்மையான வீடியோதான் என்று கூறப்பட்டதால் லேடன் உயிருடன் இருப்பதாக உறுதியாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில் அல்ஜசீரா டிவியில் லேடனின் புதிய உரை ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. அதில், ஈராக்கில் முழு அளவிலான புனிதப் ேபாருக்கு ஆயத்தமாக வேண்டும் என தீவிரவாதிகளுக்கு லேடன் அழைப்பு விடுத்துள்ளார்.
லேடனின் உரையில், ஈராக் அரசுக்கும், அமெரிக்க நாட்டு படைக்கும் எதிராக போராடும் சில இயக்கங்கள் தற்போது சிதறி கிடக்கின்றன. புனிதப்போர் நடத்தும் தங்களுடைய கடமையிலிருந்து அவர்கள் பின்வாங்க கூடாது.
சோர்வு அடையாமல் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து ஈராக்கில் பெரியளவில் தாக்குதலுக்கு தயாராக வேண்டும்.
உலகம் முழுவதும் பிரிந்து கிடக்கும் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் திருந்தி திரும்பி வாருங்கள். தாக்குதலுக்கு தயாராவோம் என்று அதில் கூறியுள்ளார் லேடன்.
பிரிந்து கிடக்கும் தீவிரவாதிகளை ஒருங்கிணைக்க அல் கொய்தா அமைப்பில் புதிய முயற்சிகள் தொடங்கியுள்ளதையே லேடனின் பேச்சு வெளிக்காட்டுவதாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே லேடனின் இந்தப் புதிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications