மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள வந்த புரளியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் எந்த நேரமும் நெரிசலுடன் இருக்கும் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு இருப்பதாக நள்ளிரவு மர்ம தொலைபேசி மூலம் தகவல் வந்தது.
இதனையடுத்து பரபரப்பான ரயில்வே போலீசார், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களுடன் சேர்ந்து வெடிகுண்டை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக தேடியும் வெடிகுண்டு சிக்காததால் இது வெறும் புரளி என முடிவுக்கு வந்தனர்.
நள்ளிரவு வந்த இந்த புரளியால் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம தொலைபேசி எந்த பகுதியில் இருந்து செய்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications