விவசாயி மனைவியுடன் கள்ளக்காதல்-வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil


பத்தமடை: பத்தமடை அருகே விவசாயி மனைவியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்ட வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

பத்தமடை பகுதியைச் சேர்ந்தவர் குமரன். விவசாய வேலை பார்த்து வரும் குமரனுக்கு தேவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இளம் பெண்ணான தேவி, தோட்ட வேலைக்கு சென்ற போது சங்கர் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்தது.

பின்னர் இந்த கள்ளக்காதல் ஜோடி சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

சங்கர்-தேவி கள்ளக்காதல் விவகாரம், தேவியின் கணவர் குமரனுக்கு தெரிய வந்தது. இதனால் வேதனை அடைந்த அவர் தனது மனைவி தேவியை கண்டித்தார்.

கணவர் கண்டித்தாலும் கள்ளக்காதலை இருவரும் கைவிடவில்லை. இதுநாள் வரை தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த இந்த கள்ளக்காதல் ஜோடிகள், குமரனுக்கு விஷயம் தெரிந்து விட்டதால், தைரியமாக குமரன் இல்லாத சமயத்தில் அவருடைய வீட்டுக்குள் உல்லாசமாக இருக்க ஆரம்பித்தனர்.

சம்பவ நாளன்று வெளியில் போயிருந்த குமரன் வீடு திரும்பினார். அங்கே தனது மனைவியும், சங்கரும் உல்லாசமாக பார்த்து ஆத்திரமடைந்தார். சங்கர் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அடித்தார். இருவருக்கும் இடையே பயங்கர அடிதடி சண்டை நடந்தது.

தேவி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பின்னர் சங்கர், மனைவி தேவி ஆகியோர் மீது பத்தமடை போலீசில் குமரன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+