For Daily Alerts
Just In
மழையால் சுவர் இடிந்து குழந்தை பலி
திருநெல்வேலி: சங்கரன்கோவில் அருகே மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்ற விவசாயியின் மகன் மனோ கார்த்திக் (வயது 2).
அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் மோசமான நிலையில் இருந்த மாடசாமியின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மனோ கார்த்திக் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 20:55 [IST]