பெண் சிசுவை தலையணையால் அழுத்தி கொன்ற தந்தை

Subscribe to Oneindia Tamil


தர்மபுரி: மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால், அந்த சிசுவை தலையணையால் அழுத்திக் கொன்ற அரக்க தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரி அன்னசாகரத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரவி. கூலி தொழிலாளியான இவருக்கும் சசிகலா என்பவருக்கும் திருமணம் நடந்து 5 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிருக்கு ஜீவா, பிருந்தா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சசிகலா மீண்டும் கர்ப்பபமானார். சசிகலாவை பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

பிரசவத்திற்கு பின் வீட்டிற்கு சசிகலாவை அழைத்து சென்றனர். சசிகலா சமையல் அறையில் இருந்த நேரத்தில் அந்த பெண் சிசுவின் முகத்தில் ரவி தலையணையை வைத்து அழுத்தியுள்ளார்.

இதில் அந்தக் குழந்தை சில வினாடிகளில் உயிரிழந்தது. ரவியின் இந்த கொடூர செயலை, சசிகலாவின் அக்கா மகன் அரவிந்தன் என்ற சிறுவன் பார்த்துவிட்டு சத்தம் போட்டான். இதையடுத்து ரவி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்த தர்மபுரி போலீஸார் குழந்தையைக் கொன்ற தந்தை மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+